Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் தபால் மூல வாக்களிப்புகள்

மட்டக்களப்பில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் தபால் மூல வாக்களிப்புகள்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன என மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட அரசாங்க அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
“இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் பதிவு செய்யப்படவில்லை.

 இதுவரை மாவட்டத்தில் 29 தேர்தல் சட்டவிரோத மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

எனினும், மாவட்டத்தில் இதுவரை எவ்விதமான தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை.

தபால் மூல வாக்களிப்புகள் 

மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலகமும் தேர்தல் திணைக்களமும் செய்து வருகின்றது.

மாவட்டத்தில் 4,49686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

442 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கல்குடா மட்டக்களப்பு பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்போம் நடைபாதைகள் நடைபெறவிருக்கின்றன.

வாக்கு என்னும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/peaceful-postal-voting-for-presidential-poll-1725548820

NO COMMENTS

Exit mobile version