Home இலங்கை அரசியல் இரத்து செய்யப்படும் ஓய்வூதியம் : கவலையில் வாடும் எதிர்க்கட்சி எம்.பி

இரத்து செய்யப்படும் ஓய்வூதியம் : கவலையில் வாடும் எதிர்க்கட்சி எம்.பி

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பாரிய மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நான் அறிந்தேன். 

அரசியலில் ஓய்வு

நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான எம்.பி.க்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, மிகவும் மோசமான சூழ்நிலையில் கைவிடப்படுகினறனர். 

எங்களுக்குத் தெரிந்தவரை, 10% – 15% பேர் அதை இழந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவரை, பெரும்பான்மையினரால் வேளை செய்ய முடியாது. அரண்மனைகள் மற்றும் பங்களாக்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் சொல்கிறேன்.

மேலும், இப்போது இந்தப் பணம் குறைக்கப்பட்டுள்ளது, எம்.பி.யின் உணவு ரூ. 2000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, எம்.பி.யின் ஓய்வூதியம் இழக்கப்பட்டுள்ளது, இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இது என்ன பங்களிப்பைச் செய்யும்?” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version