யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு மயானத்திற்கு
வீதியின்மையால் இறுதிக்கிரிகையை மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்நோக்கியுள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கில் இன்றையதினம் அமரத்துவமடைந்த ஒருவரது தகனம் கிரியைகளை
மேற்கொள்வதற்கு சுமார் இரண்டடி மழை வெள்ளத்தை கடந்த, சென்று எரிகொட்டகை
எதுவுமின்றி வெறும் நிலத்தில் வைத்து சடலம் தகனம் செய்யப்பட்டது.
உரியவர்கள் கவனமெடுத்து மயானத்திற்கான வீதி மற்றும் கொட்டகை ஆகியவற்றை அமைத்து
தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
