Home இலங்கை சமூகம் மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு

0

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் பலவந்தமாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம்பெற இருந்த நிலையில் அப்பகுதி மக்கள்
ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது இன்று (15.06.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம்

இந்தப் பகுதியில் சுமார்
160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.

அடைக்கப்பட்ட காணிகள் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை
செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்
தெரிவித்துள்ளனர்.

காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளனர்.

கனிய மணல் அகழ்வு

எனினும், குறித்த காணிக்குள் இன்று (15) காலை வருகை
தந்த சிலர் காணியில் கனிய மணல் அகழ்வில் ஈடுபட நடவடிக்கை எடுத்த நிலையில்
அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர். 

மேலும் காணியில் என்ன திட்டம் முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற விடயம் தமக்கு
தெரியாது என்றும் வெளிப்படையாக எமக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த மக்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
மக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அத்துமீறி பிடிக்கப்பட்ட காணி பகுதிக்குச்
சென்று அங்கு பொறுப்பாக இருந்தவருடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், மக்கள் எதிர்ப்பு
தெரிவிக்கின்றமையினால் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க
வேண்டாம் என்றும் மக்களுடன் பிறிதொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாக
கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த காணியில் நின்ற உரிய நபர் எவ்வித நடவடிக்கைகளையும்
முன்னெடுக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.

NO COMMENTS

Exit mobile version