அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும்
தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் அண்மைக் காலமாக பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் நேற்று (16.07.2025) தவிசாளர்
அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில்
நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் உரையாடிய பிரதேச சபையின் உறுப்பினர், “அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
இது எமது பிரதேசத்திலும், மக்கள் தமது அத்தியாவசிய உணவு தேவைகளைப் பூர்த்தி
செய்வதிலும், அவர்களின் சுகாதாரத்தை மட்டுமல்லாது ஆரோக்கியத்தை
பாதுகாப்பதிலும் பெரும் சவாலாக இருப்பது வேதனைக்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
