Home இலங்கை சமூகம் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! தடையை நீக்க தீர்மானம்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! தடையை நீக்க தீர்மானம்

0

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறுதியான வாகன இறக்குமதியின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 3 வருடங்களை 7 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு ஆணித்தரம்

புதிய வாகனங்கள்

அத்துடன், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்தால், புதிய வாகனங்களை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் வரி வருமானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version