Home இலங்கை குற்றம் கொழும்பில் வெளிநாட்டு தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பில் வெளிநாட்டு தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0

கொழும்பு பொலிஸ் அதிகாரிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி, மற்றும் ஐந்து ரவைகளை, கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாகம்மன பகுதியில் (25) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. 

இதனை தொடரந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர், ஹோமகம, மாகம்மனாவில் வசிக்கும் 43 வயதானவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவம் குறித்து கஹதுடுவ மற்றும் மொரகஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version