முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான போதைப்பொருளை பாவித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் கடந்த 22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர்
பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்களில் போதைப்பொருள்
பாவனையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டடுள்ளார்.
பொலிஸார் தகவல்
இந்நிலையில் ஏனைய இருவரும் சம்பவ இடத்தினை
விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய வவுனியாமாவட்டத்தினை
சேர்ந்த புதுக்குடியிருப்பில் திருமணம் செய்து வாழ்ந்துவரும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
