Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டுகுடா (Kotuguda) பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர்ரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 01 கிலோ 883 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மிதிகம இப்பன்வள பகுதியில் வைத்து 01 கிலோ 838 கிரேம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிதிகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சோதனை செய்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியை சேர்ந்த 20 வயதுடைய  நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version