Home இலங்கை சமூகம் யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

0

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பேரானந்த
சிதம்பரம் நாகராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக
கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இவ்வாறு சென்றவர் இன்று காலைவரை திரும்பி
வராததால் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது இன்று காலை
பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version