Home இலங்கை சமூகம் அதிக விலைக்கு அரிசி விற்பனை: பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

அதிக விலைக்கு அரிசி விற்பனை: பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

0

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முறைப்பாடு 

எனவே, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ பச்சை அரிசி 220 ரூபாவாகவும் ஒரு கிலோ சிவப்பு நாடு அரிசி 230 ரூபாவாகவும் ஒரு கிலோ கீரி சம்பா பச்சை அரிசி 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version