Home இலங்கை சமூகம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதி : வெளியான அதிரடி அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதி : வெளியான அதிரடி அறிவிப்பு

0

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம்
ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற
பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு மூலமாக
1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில்,
நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய்
சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண
ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி
தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய்
சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும்
முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் செந்தில்
தொண்டமான் தெரிவித்துள்ளார்.

1700 ரூபாய் சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில்
தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version