Home இலங்கை குற்றம் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது

0

யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது
செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு பின்
வீதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக பொலிஸாருககு கிடைத்த
புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 2 போதை
மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்

மேலதிக விசாரணை

இதனையடுத்து குறித்த இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version