Home இலங்கை குற்றம் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

0

சந்தேக நபரொருவரை கைது செய்ய பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

களுத்துறை, பண்டாரகமை நகரத்தில் திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணத்தை பெற்றதாக கூறப்படும் சந்தேகத்தில் அவரை பொலிஸார் தேடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

சந்தேகநபர் திருடிய ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி பண்டாரகமை நகரத்தில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரமொன்றிலிருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் புகைப்படம் குறித்த ஏ.ரி.எம் இயந்திரத்திற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591681 அல்லது 071 – 8594267 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/police-asking-public-help-in-arresting-the-suspect-1733193186

NO COMMENTS

Exit mobile version