Home இலங்கை சமூகம் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

0

கொழும்பு – கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொரணவில சந்திக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரொருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி லொறி ஒன்று வீதியில் பயணித்த நபரொருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தின் 071 859 2773 அல்லது 011 260 3742 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version