குற்றப் புலனாய்வுத் துறையின் சிரேஷ்ட அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மற்றும் அவரின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கும்பல் 25ற்கும் மேற்பட்ட இளைஞர்களின் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றச் சாட்டின் பேரிலே நேற்றையதினம்(06) அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கொள்ளைச் சம்பவங்களைச் செய்ய சந்தேக நபர்கள் தீவு முழுவதும் பயணிக்கப் பயன்படுத்திய காரையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
முக்கிய சந்தேக நபரும் மற்றொரு நண்பர் சந்தேகத்திற்கிடமான சோதனைகளை நடத்துவதாகக் கூறி இளைஞர்களிடம் கொள்ளையடித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதுருகிரியவில் ஒரு இளைஞரிடமிருந்து ரூ.210,000 மதிப்புள்ள தங்க நெக்லஸைக் கொள்ளையடித்ததாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளிலிருந்து சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
விசாரணையின் போது, நாடு முழுவதும் பல பகுதிகளில் இதேபோன்ற கொள்ளைகளைச் செய்ததாக சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
முக்கிய சந்தேக நபர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 34 வயதுடைய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள், மற்றவர்கள் ரதாவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் ஒபேசேகரபுரத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் என தெரியவந்துள்ளது.
