Home இலங்கை குற்றம் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற தந்தை

மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற தந்தை

0

அனுராதபுரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் சீருடையின் உத்தியோகபூர்வ இலக்கத் தகடு மற்றும் சீருடையின் இரண்டு பொத்தான்கள் என்பன வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளன.

இந்த குற்றச்செயலை மகனே மேற்கொண்டதாக கூறி இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.


முறைப்பாடு

சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபரான மகன் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version