Home இலங்கை அரசியல் 5 வயதுடைய சிறுமியை துன்புறுத்திய நபர்! காவல்துறை விசாரணை

5 வயதுடைய சிறுமியை துன்புறுத்திய நபர்! காவல்துறை விசாரணை

0

மட்டக்களப்பை சேர்ந்த 5 வயதுடைய சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குறித்த சிறுமிக்கு உடல் முழுதும் சூட்டுக்காயங்களுடன் அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி
படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாயாருடன் தொடர்பில் நெருங்கிய இருந்த நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை சித்திரவதை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த சிறுமி

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த படுகாயமடைந்த சிறுமியின் தாயார் திருமணம் முடித்து கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் தாயார் காத்தான்குடி பகுதியில்
திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார்.

குறித்த நபர் மேற்படி கூறப்பட்ட பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக
தெரிவித்து குறித்த பெண்ணுடன் அவரது 5 வயது குழந்தையையும்
அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்த விடுதி பகுதியில் வைத்து குறித்த ஆண்
சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ள தையடுத்து சிறுமியின்
வாய் மற்றும் கை ,கால், முதுகு உட்பட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு
படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியுடன் தாயார் கொழும்பில் இருந்து மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பிய நிலையில்
நேற்று சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version