Home இலங்கை சமூகம் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்

தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்

0

அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் அம்பாறை, பதியதாவை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

பதியதலாவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு, பொலிஸ் குடியிருப்பில் வைத்து தவறான முடிவை எடுத்துள்ளார்.

காரணம் தெரியவில்லை

தவறான முடிவெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் பிபிலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

எனினும், தவறான முடிவெடுப்பதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.  

மேலதிக தகவல் – ஆனதி

NO COMMENTS

Exit mobile version