Home இலங்கை குற்றம் வெள்ளவத்தையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – 6 பெண்கள் அதிரடியாக கைது

வெள்ளவத்தையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – 6 பெண்கள் அதிரடியாக கைது

0

கொழும்பு, வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் வெளிநாட்டுப் பெண்களை பணியமர்த்திய தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை ரயில் நிலைய வீதி பகுதியில் இயங்கும் விடுதியை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட 6 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version