Home இலங்கை குற்றம் மட்டக்களப்பு நகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை 9 மணித்தியாலத்தில் மீட்ட பொலிஸார்

மட்டக்களப்பு நகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை 9 மணித்தியாலத்தில் மீட்ட பொலிஸார்

0

மட்டக்களப்பு (Batticaloa) நகரில் திருடிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை சுமார் 9 மணித்தியாலயத்தில் வாகரையில் வைத்து மீட்டதுடன் திருடிய நபரையும் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கே.கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (11.06.2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் அரச வங்கி ஒன்றில் கடமையாற்றிவரும் ஒருவர் சம்பவதினமான நேற்று (11.06.2024) பிற்பகல் 1.30 மணியளவில் வங்கி வாகன தரிப்பிடத்தில் தனது மோட்டர் சைக்கிளில் அதன் திறப்பு மற்றும் தலைக்கவசத்தை விட்டுவிட்டு வங்கிக்குள் சென்றுள்ளார்.

பருத்தித்துறை கொல்களத்தை முற்றுகையிட்டு மாடுகளை மீட்ட பொலிஸார்

ஆரம்பகட்ட விசாரணை

இந்நிலையில், வங்கியில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என அங்கு சென்ற
ஊறணி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் அங்கு சாவியுடன் நிறுத்தி
இருந்த மோட்டர் சைக்கிளை திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபரின் உறவினர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு

பத்தரமுல்லை விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version