Home இலங்கை சமூகம் மக்களே அவதானம்..! போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

மக்களே அவதானம்..! போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

0

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் விடுத்துள்ளார்.

பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version