Home இலங்கை சமூகம் பூநகரி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

பூநகரி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

0

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுக்கூட்டமானது நேற்று (17.10.2025) 09.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு
மண்டபத்தில் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கருணநாதன் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இளங்குமரன் எம்பி, அரசினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் என்ன நிலைமையில் உள்ளன. 

முக்கிய விடயங்கள் 

இடர்பாடு
உடைய இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு என்ன நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதே இவ் ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்தின் நோக்கம் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் ஒருங்கிணைப்புக் குழுக்களை
மீளமைத்தல் தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பற்றி
விளக்கமளிக்கப்பட்ட பின் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து
பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டிய வேலைத்திட்டங்கள்
தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version