Home இலங்கை சமூகம் யாழில் பொசன் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சை

யாழில் பொசன் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சை

0

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) 125
இற்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று (21) கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

51 இராணுவ படைப்பிரிவின்
உதவியுடன் குறித்த கண் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின்
தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் பொசன் ஆராதனை
நிகழ்வுகள் இடம்பெற்றன.

கண்புரை சிகிச்சை

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட இராணுவ
கட்டளை தளபதி, வடக்கு மாகாண பிரதி காவல்துறைமா அதிபர், மற்றும் யாழ் போதனா
வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர்.

இதேவேளை, பொசன் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறையினரால் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version