மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
தற்போது மதுவரி ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை உள்நாட்டு வருவாய் சேவையின் சிறப்பு தர அதிகாரியான யு.எல். உதய குமார பெரேரா கடமையாற்றுகின்றார்.
இந்த மாதம் 10ஆம் திகதி அவர் குறித்த பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
