Home இலங்கை அரசியல் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான (Presidential Election) அஞ்சல் மூல வாக்குச் சீட்டுகள் அஞ்சல் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வாக்குச் சீட்டுகளை நாளைய தினம் (26) வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

வாக்குச்சீட்டுகள் அச்சிடல்

இந்தநிலையில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

இந்தப் பணிகளுக்கான விசேட தினமாக செப்டம்பர் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/postal-ballots-will-be-delivered-to-post-offices-1724559900

NO COMMENTS

Exit mobile version