Home இலங்கை சமூகம் யாழில் நடைபெறும் அஞ்சல் மூல வாக்களிப்பு

யாழில் நடைபெறும் அஞ்சல் மூல வாக்களிப்பு

0

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு
நேற்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்றையதினம் (05)  ஆசிரியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

தேர்தல் ஆணையம் 

காலை வேளை குறைந்த அளவு வாக்காளர்களே வாக்களிக்க அங்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய அலுவலகங்கள், மூத்த பிரதிப் பொலிஸ் மா
அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர்
மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு
அதிரடிப்படை முகாம்கள், சிறப்பு காவல் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version