Home இலங்கை சமூகம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சுமுகமாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சுமுகமாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

0

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று (05) காலை 8:30 மணிக்கு திருகோணமலை (Trincomalee) – தம்பலகாமம் (Thambalagamuwa) பிரதேச செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி முன்னிலையில்
வாக்களிப்புகள் இடம்பெற்றன.

தபால் மூல வாக்களிப்பு 

இதேவேளை சுமார் 112 உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தில் வாக்களிப்பதற்கு
விண்ணப்பித்திருந்ததுடன் சமூக நீர்வளங்கள் திணைக்களத்தில் இருந்து 5 பேர் பிரதேச
செயலகத்தில் வாக்களித்தனர்.

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மொத்தமாக 117 தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தார்கள்.

கட்சிகளின் முகவர்கள் இவ்வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகி வாக்களிப்பை
கண்காணித்திருந்தனர். எவ்வித குளறுபடியும் இன்றி சுமுகமாக வாக்களிப்புகள் இடம்பெற்றன.

எதிர்வரும்
21ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version