முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை
மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிவான் நீதிமன்றம் இன்று(04.08.2025) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதிவான் முன்னிலையில்
இன்று முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள
அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவைக் கைது
செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விளக்கமறியல்
ஆனால், பிரசன்ன ரணவீர நீதிமன்றத்தில் சரணடையாமல் பிரதேசத்தை விட்டுத் தப்பிச்
சென்று நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தார்.
பின்னர், பிரசன்ன ரணவீர கடந்த மே மாதம் 7ஆம் திகதி நீதிமன்றத்தில்
சரணடைந்ததையடுத்துத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
