Home இலங்கை சமூகம் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தலின் போது இவ்வாறு கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட குழு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் பாதாள உலகக் கூட்டத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

Source: https://tamilwin.com/article/president-election-srilanka-2024-1725760303

NO COMMENTS

Exit mobile version