Home இலங்கை சமூகம் இலத்திரனியல் விசா விவகாரம்: குடிவரவு- குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இலத்திரனியல் விசா விவகாரம்: குடிவரவு- குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (25) நடைபெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலத்திரனியல் விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து குடிவரவு குடியகல்வு அதிகாரியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு ஜனவரி 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version