Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் யாழ் வருகை : 20 விடயங்களை முன்வைத்த கஜேந்திரகுமார்

ஜனாதிபதியின் யாழ் வருகை : 20 விடயங்களை முன்வைத்த கஜேந்திரகுமார்

0

ஜனாதிபதி தலைமையில் இன்று (31) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான
விடயத்தானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு
வழங்கியுள்ளார்.

இருபது முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயத்தானங்களை அபிவிருத்தி குழு கூட்ட
நிகழ்சி நிரலில் சேர்ப்பதற்காக இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு நிலையம்

யாழ். போதானா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகளாவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது. பல
விடுதிகளில் அவ்வப்போது நோயாளர்கள் கட்டில்கள் இல்லாத நிலையில் நிலங்களில்
படுக்கின்ற நிலைமை சீர் செய்யப்படல்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப்பொருள் பயன்பட்டிற்கு
அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனவாழ்வளித்து
மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்படல்.

யாழ் மாவட்டத்தில் கடற்தொழில்படகுகளை பாதுகாப்புக்கான கல்லணைகளை அமைத்தல்.

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு..

மண்ணை அகற்றுவதற்கான திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. அனுமதியை
சம்பந்தப்பட்ட எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள
பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.

இந்திய கடற்தொழிலாளர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இழப்பீடுகள்
வழங்கப்படல் வேண்டும்.

கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு வழங்கப்படல்
வேண்டும்.

யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு
வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ள நிலையில் நிதியை
அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு இருபது கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான
மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version