Home இலங்கை சமூகம் உச்சத்தைத் தொட்ட இஞ்சியின் விலை

உச்சத்தைத் தொட்ட இஞ்சியின் விலை

0

இலங்கையில் (srilanka) இஞ்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கனமழையினால் பயிர்கள் நாசம்

ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.

அண்மைக்காலமாக பெய்த கனமழையினால் பயிர்கள் நாசமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விலையை கட்டுப்படுத்தும் வகையில் 3000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/price-of-ginger-hits-rs-3000-per-kilo-today-1724830841

NO COMMENTS

Exit mobile version