கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardene), முகாமைத்துவ பயிற்சி அலகின் ஆண்கள் விடுதியினை திறந்நு வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு, நேற்று (12.07.2024) கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள
முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முகாமைத்துவ கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
டக்ளஸ் தேவானந்தா
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ் எம் சாள்ஸ் மற்றும் வடக்கு
மாகாண செயலாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.