Home இலங்கை பொருளாதாரம் அநுரவின் தாமதத்தினால் 2028 இல் மோசமடையும் ஆட்சி

அநுரவின் தாமதத்தினால் 2028 இல் மோசமடையும் ஆட்சி

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதிகளை செயற்படுத்த தாமதிப்பதால் 2028ஆம் ஆண்டளவில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தன.

அந்த காலப்பகுதியில் அரசாங்கத் திட்டங்களை செயற்படுத்துவதில் கடினத்தன்மை இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியும்.

எனினும், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இவ்வாறான நிலை தொடருமாயின் 2028ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரம் கேள்விக்குறியாக மாறும்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,      

Source: https://tamilwin.com/article/probabilities-for-sri-lankan-economy-in-2028-1734184307

NO COMMENTS

Exit mobile version