Home இலங்கை சமூகம் வடக்கு கிழக்கில் உள்ள அங்கவீனமானவர்களுக்கு இந்தியாவில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை அவயங்கள்

வடக்கு கிழக்கில் உள்ள அங்கவீனமானவர்களுக்கு இந்தியாவில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை அவயங்கள்

0

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்களுக்கு இந்தியாவில்
செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இருபது பேரும் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு
புறப்பட்டு சென்று சிறப்பு செயற்றிட்ட முகாம் ஒன்றில் பங்கெடுத்ததுடன், அங்கு
அவர்களுக்கான செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் இருபது பயனாளிகளும் நேற்று இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம்
சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

செயற்கை அவயங்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு
அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்குவதே
இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

குறித்த செயற்றிட்டமானது யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
கே.செல்வகுமாரினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், Canada Fund for Local Initiative
மற்றும், Canada Sri Lanka Business Convention ஆகிய அமைப்புகளால் நிதி
வழங்கப்படுகிறது.

இச்செயற்றிட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்த பேராசிரியர் செல்வகுமார்,
குறித்த செயற்றிட்டத்துக்கு இடையூறாக எவரும் செயற்பட வேண்டாம் என வேண்டுகோள்
விடுத்தார்.

செயற்றிட்டம் 

இதேவேளை குறித்த செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பயனாளர்கள்,
உண்மையிலேயே இந்த செயற்றிட்டத்தின் மூலம் எமக்கு பெரிய உதவி கிடைத்துள்ளது.
இதனை ஏனையவர்களும் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்கை அவயவங்கள் உற்பத்தி மையம் ஒன்றை
உருவாக்கவும், மாற்றுவலுவுடையவர்களால் குறித்த மையம் நடாத்தப்படவும்
எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

NO COMMENTS

Exit mobile version