Home இலங்கை சமூகம் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : ஐந்து பெண்கள் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : ஐந்து பெண்கள் கைது

0

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

சின்ன இங்கிலாந்து என்று அழைக்கப்படும் மிகவும் குளிரான பிரதேசமான நுவரெலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 காவல்துறைக்கு இரகசிய தகவல்

நுவரெலியா(nuwara eliya) சினிசிட்டா மைதானத்திற்கு முன்பாக மசாஜ் நிலையம் எனத் தெரிவித்து விடுதியொன்று இயங்கி வந்துள்ளது.

எனினும் குறித்த விடுதியில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கு அமைய செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல்
இந்த விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஐந்து பெண்கள் உட்பட விடுதியின் முகாமையாளரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள்

இதனை வியாபாரமாக நடத்தி சென்ற நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் கொலன்னாவ, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை, ஹோமாகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 32-47 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களை இன்று புதன்கிழமை (09) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் தெரிவித்தார்.  

NO COMMENTS

Exit mobile version