Home இலங்கை சமூகம் சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர்
போராட்டம் இன்றையதினம் (20.07.2024) ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

பொதுமக்கள் 

குறித்த போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அக் கட்சியின் ஊடகப்
பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version