Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் ஒரு வருடத்திற்கு மேலாக சுண்ணக்கல் அகழ்விற்கு எதிராக போராடும் மக்கள்

கிளிநொச்சியில் ஒரு வருடத்திற்கு மேலாக சுண்ணக்கல் அகழ்விற்கு எதிராக போராடும் மக்கள்

0

கிளிநொச்சி – பூநகரி, பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் 300 அடிக்கு கல் அகழப்படுமானால் அது அயலில் உள்ள கிராமங்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

தொடரும் போராட்டம்

மேலும், தேர்தலில் ஆட்சியமைக்கவுள்ள அரசாங்கத்தினை பொருத்து மாற்றமையடையவுள்ள நிலைமை தொடர்பிலும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மக்கள் ‘நிலத்தையும் நீரையும் நாசம் செய்யாதே’, ‘அமைச்சுப் பதவிக்காக எங்களின் வளங்களை விற்காதே’ மற்றும் ‘எங்களின் கிராமங்களை பிளவுப்படுத்தாதே’ போன்ற வாசங்கங்கள் எழுதிய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version