Home இலங்கை சமூகம் மன்னார் நகரசபை ஊழியர்கள் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக போராட்டம்

மன்னார் நகரசபை ஊழியர்கள் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக போராட்டம்

0

மன்னார் (Mannar) நகரசபை ஊழியர்களால் ரெலோ மாவட்ட இணைப்பாளருக்கு எதிராக கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகள் சேகரிக்க சென்ற மன்னார் நகரசபை பெண் ஊழியர் ஒருவரின் கடமைக்கு செல்வம் அடைகலநாதனின் (Selvam Adaikalanathan ) அலுவலகத்தில் இடையூறு விளைவிக்கப்பட்டமையை முன் நிறுத்தியே  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகளை அறவிடுவதில் மன்னார் நகர சபை பெண் ஊழியர்கள் இருவர் கடமையில் கடந்த வியாழக்கிழமை (12) ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் 

இதன்போது வன்னி ரெலோ நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வீட்டுக்கு இரு பெண் ஊழியர்கள் சென்று நிலுவையிலுள்ள ஆதனவரியை சேகரிக்கச் சென்ற போது இவ் அலுவலகத்துக்கு பொறுப்பு வாய்ந்தவருக்கும் அங்குச் சென்ற பெண் ஊழியருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெண் ஊழியர் கடமைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக மன்னார் காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டம் 

இந்த செயற்பாட்டைக் கண்டித்தும் சம்மந்தப்பட்ட நபரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து மன்னார் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் , மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மன்னார் நகர சபைக்கு முன்னால் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பெண்கள் மீது வன்முறை காட்டும் கோழைகள் தண்டிக்கப்பட வேண்டும், பண பலமிருந்தால் அரச அலுவலரை அடிப்பது சாதாரண விடயமா மற்றும் வசந்தனை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா ரெலோ தலைமைத்துவம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version