Home இலங்கை சமூகம் பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம்: வீதிக்கு இறங்கிய உத்தியோகத்தர்கள்

பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம்: வீதிக்கு இறங்கிய உத்தியோகத்தர்கள்

0

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக
மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது எனவும், இதனை மீள் பரிசீலனை
செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை இணைந்த சேவை உத்தியோகத்தர்களினால் இவ் கவனயீர்ப்பு
முன்னெடுக்கப்பட்டது.

பழிவாங்கும் நோக்கம்

இடமாற்ற சுற்றறிக்கையில் பிழைகளை விட்டுவிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தூரப்
பகுதிகளுக்கு பிரதேச செயலக ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை
உத்தியோகத்தர்களை உடல், உள ரீதியாக பாதிக்க வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட
உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

அத்தோடு இடமாற்றத்தில் பிரதேச
செயலகங்களுக்கிடையிலும் ஆண், பெண் என்ற ரீதியிலும் பாகுபாடு
காட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version