Home இலங்கை சமூகம் அடுத்தடுத்து நிகழும் பாலியல் சீண்டல்கள் :யாழில் போராட்டத்தில் குதித்த பெண்கள்!

அடுத்தடுத்து நிகழும் பாலியல் சீண்டல்கள் :யாழில் போராட்டத்தில் குதித்த பெண்கள்!

0

யாழில்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (13) யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மனு கையளிப்பு

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின், பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டு வர மௌனத்தை கலைப்போம் எனும் தொனிப் பொருளில் மக்கள் கவனயீர்ப்பு செயல்வாதம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட
பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று மனு கையளிப்புடன்
நிறைவடைந்தது.

NO COMMENTS

Exit mobile version