Home இலங்கை சமூகம் யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்

0

இலங்கை (Sri Lanka) கடற்பரப்புக்குள் அத்துமீறும்  இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யக் கோரி யாழ். மாவட்ட கடற்தொழில்
அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது  இன்று (01) யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்

இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டமானது ஊர்வலமாக  யாழ்ப்பாணம் (Jaffna) மருதடிச் சந்தியில் ஆரம்பித்து இந்திய துணைத்
தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.

இதன்போது, கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும்
கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி முதல் இன்று வரையில் 32 படகுகளுடன் 238 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version