Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டம்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டம்

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி(Kilinochchi) கந்தசுவாமி
ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த போராட்டமானது, இன்றைய தினம்(25.06.2024) காலை 10.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை 

அதேவேளை, “இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும்” போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இந்த போராட்டமானது அரை மணித்தியாலயங்கள் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version