Home இலங்கை சமூகம் மந்தாரம்நுவரயில் பொலிஸாருக்கு எதிராக போராட்டம்! பொலிஸார் விளக்கம்

மந்தாரம்நுவரயில் பொலிஸாருக்கு எதிராக போராட்டம்! பொலிஸார் விளக்கம்

0

மந்தரம்நுவரயில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் போது பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சமூக வலைதளங்களில் பரவும் காணொளி தவறான
விளக்கங்களுடன் பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் பாதுகாப்பு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலங்குவானூர்தியில் கொண்டுவரப்பட்ட
நிவாரணப் பொருட்கள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டதாகவும், பொலிஸார் பாதுகாப்பு வழங்க மட்டும்
அனுப்பப்பட்டிருந்ததாகவும் திணைக்களம் குறிப்பிடுள்ளது.

கடந்த 2025 டிசம்பர் 7ஆம் திகதி 150 – 200 பேர் அளவிலான குழுவொன்று அரச
அதிகாரிகளிடம் பொருட்கள் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

எனினும் பொலிஸார் அமைதியை பேணியதாகவும், பொலிஸ் நிலையம் தாக்கப்படவில்லை
என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version