Home உலகம் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த பாரிய போராட்டம் !

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த பாரிய போராட்டம் !

0

பிரான்ஸ் (France) நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் படி ஆளும் கட்சிக்கு எதிராக வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (Paris) வன்முறையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் அதிபர் இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron ) நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததுமே அதிபரின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இதனடிப்படையில் அதை போலவே தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்து எதிர்பார்த்தது போல வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வெற்றிக்கு எதிர்ப்பு 

அத்தோடு, மேக்ரான் கட்சிக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ள நிலையில் வலதுசாரியினரின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதும் மற்றும் தீவைப்பு சம்பவங்களுமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடிக்க பேரணியில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலதுசாரியினர் ஆட்சி

இந்நிலையில், வலதுசாரியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க என்ன செய்வது என்ற யோசனையில் பிற கட்சிகள் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்சில் முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு கட்சிகளுக்கிடையில்தான் இரண்டாவது கட்ட போட்டி நடைபெறும் இதனால் மேக்ரான் கட்சி போட்டியிட வாய்ப்பில்லையென தெரிவிக்கபடுகின்றது.

மேலும், சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை பதவி விலகச் செய்து அதன் மூலம் வலதுசாரியினரை வெற்றி பெறச் செய்யவிடாமல் தடுக்க திட்டங்கள் தீட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/protests-in-paris-france-election-1719865304

NO COMMENTS

Exit mobile version