Home இலங்கை குற்றம் காணாமல் போன யுவதியை தேடும் பொலிஸார்

காணாமல் போன யுவதியை தேடும் பொலிஸார்

0

கேகாலை, மாவனெல்ல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

21 வயதான தருஷி செவ்வந்தி திசாநாயக்க என்ற யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுவதியின் தந்தையால் மாவனெல்ல பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து காணாமல் போன யுவதி தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யுவதி பற்றிய தகவல் 

காணாமல் போன யுவதி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071- 8591418 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version