Home இலங்கை சமூகம் பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்காக வரிசையில் மக்கள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்காக வரிசையில் மக்கள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

பத்தரமுல்லையில் (Battaramulla) அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாலை முதலே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், பலர் அதிகாலை நான்கு மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு

இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herat) தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version