Home இலங்கை சமூகம் மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

0

பதுளை (Badulla) – பண்டாரவளை (Bandarawela) தொடருந்து பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதுளைக்கு செல்லும் தொடருந்துகள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways – Sri Lanka) அறிவித்துள்ளது.  

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை

நிலச்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை பண்டாரவளை வீதி உடுவர கிரிமண்டலயத்திற்கு அருகில், ஹப்புத்தளை பெரகல வீதி, பதுளை – பசறை வீதி மூன்றாம் கம்பம், பதுளை கந்தன ஊடாக ஸ்பிரிங்வேலி வீதி ஊடாக, பதுளை பசறை வீதியின் 7 ஆம் கம்பம், பிபில லுணுகல வீதியில் அரவாகும்புர ஆகிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.

வீதிகள் தடைப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version