2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
